ரிலையன்ஸ் ஜியோவில் இனி அன்லிமிடெட் கால் பன்ன செக்! 149க்கு அன்லிமிடெட் டேட்டா! : புது தகவல்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2017

ரிலையன்ஸ் ஜியோவில் இனி அன்லிமிடெட் கால் பன்ன செக்! 149க்கு அன்லிமிடெட் டேட்டா! : புது தகவல்கள்

இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் வழங்குவதாக அறிவித்த நிலையில், அன்லிமிட்டெட் கணக்கில் புதிய செக் வைக்கும் தகவல்களை அறிவித்துள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை வழங்குவதாக அறிவித்த நிலையில், அன்லிமிட்டெட் கணக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக ஐந்து மணி நேரம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என ஜியோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வாய்ஸ் கால் அளவு ஒரு மணி நேரத்தை கடக்கும் போது அழைப்புகளில் இடையூறு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ எண் கொண்டு எந்த நெட்வொர்க் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டாலும் இதே நிலை ஏற்படும் என்றும், இவ்வாறான இடையூறுகள் ஒருசில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அழைப்புகள் இந்த காலக்கெடுவை நீளும் பட்சத்தில் அந்த நாளில் மற்ற அழைப்புகள் மேற்கொள்ள முடியாது.

ஒருவேளை தொடர்ந்து வாய்ஸ் கால் மேற்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது ஜியோ கணக்கில் ரூ.149க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவையை வாடிக்கையாளர்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட விதிமுறைகள் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை சார்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ இதுவரை வழங்கியுள்ள அறிவிப்புகளின் படி வாய்ஸ் கால் காலக்கெடு சார்ந்து எவ்வித தகவல்களும் இடம்பெறவில்லை. இதனால் ஜியோ சேவைகளை இந்த காலக்கெடுவிற்குள் எவ்வித இடையூறும் இன்றி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.

தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் ஜியோ சார்பில் வாடிக்கையாளர்களுக்கு புதிதாய் விதிக்கப்படவில்லை, என்றாலும் சில வாடிக்கையாளர்களுக்கு சேவைகளின் இடையே கோளாறு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும்
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.149 திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி புதிய மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

எனினும் இந்த திட்டத்தில் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா மட்டுமே 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 2 ஜிபி டேட்டாவினை பயன்படுத்தியதும், 4ஜி வேகம் குறைக்கப்படும். மற்ற திட்டங்களில் தினசரி டேட்டா பயன்பாடு நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி.யாக குறைக்கப்படும். ஆனால் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்படுகிறது.





ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 திட்டத்தின் ஒரே நன்மை கூடுதல் டேட்டா பயன்படுத்த வாடிக்கையாளர்கள் எவ்வித ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ரூ.149க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படும். எனினும் நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்ததும், டேட்டா வேகம் குறைக்கப்பட்டு விடும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி