மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2017

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை

''முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறலாம்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.சென்னை, புதுப்பேட்டையில் நடந்த, டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கூடுதலாக டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நியமிக்கப் பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், சிகிச்சை அளிக்கப்படும். தினமும், 2,000 ரூபாய் வரை சிகிச்சைக்காக பெற்று கொள்ளலாம். இந்த திட்டம், தமிழகம் முழுவதும் உள்ள, 870 மருத்துவமனைகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.அதேபோல, பன்றிக்காய்ச்சல் மூலம், இறந்தவர்கள் குறித்த ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு பாதிப்பு உள்ளோருக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு, தேவையான மருத்துவ உபகரணங்களை, மருத்துவமனை நிர்வாகமே வாங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.உணவகங்களிலும் நிலவேம்பு கஷாயம் : சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், உணவு வணிக சங்க நிர்வாகிகளுடன், ஆலோசனைநடந்தது.

இந்தக் கூட்டத்தில், 'அனைத்து உணவகங்களிலும், வாடிக்கையாளர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும். தேவையான நிலவேம்பு பாக்கெட்டுகள், மாவட்ட உணவு அதிகாரிகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி