அரசுப் பள்ளி ஆசிரியரின் கைவண்ணத்தில் உருவாகிய தூய்மை இந்தியா விழிப்புணர்வு மணல் சிற்பங்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2017

அரசுப் பள்ளி ஆசிரியரின் கைவண்ணத்தில் உருவாகிய தூய்மை இந்தியா விழிப்புணர்வு மணல் சிற்பங்கள்!

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முழு சுகாதாரத்தினை வலியுறுத்தும் வகையில் மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.


ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு சுகாதாரத்தினை ஏற்படுத்தி சுகாதாரத்தில் தன்னிறைவு என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி என அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொண்டு வருவதுடன்,  ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கழிப்பறை இல்லா வீடுகளை கண்டறிந்து, தனி நபர் கழிப்பறை திட்டம், தூய்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு பணிகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய தூய்மை இயக்கத்தினை பரவலாக்கும் விதமாக புனித தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பரமக்குடி அரசு பள்ளி ஆசிரியர்  சரவணகுமார் தன்னார்வத்துடன் உருவாக்கியுள்ள இந்த மணல் சிற்பங்களை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.  பலவகை வண்ணங்களில் தூய்மை இயக்கத்தினை காட்சி படுத்தும் இந்த மணல் சிற்பங்கள் மூலம் மக்கள் மனதில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உருவாகும் எனவும், இது போன்ற காட்சி படுத்தலின் மூலம் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நடராஜன், அலுவலர்களை கேட்டு கொண்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி