ஆதார் அட்டை இல்லையா? அப்படியெனில் சி.பி.எஸ்.இ தேர்வுஎழுத முடியாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2017

ஆதார் அட்டை இல்லையா? அப்படியெனில் சி.பி.எஸ்.இ தேர்வுஎழுத முடியாது.

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கட்டாயம் என்ற நிலை ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. ஆதார் இல்லாமல் இனிமேல் தெருவில் கூட நடக்க முடியாது என்று கூறப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நிலையில் சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சி.பி.எஸ்.இ தேர்வுகளை எழுத தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளும் தங்கள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆதார் எண் உட்பட அனைத்து ஆவணங்களையும் சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆதார் எண் இல்லாத மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணின் பதிவெண்ணை வழங்கி தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி