இபிஎப்ஓ ஓய்வூதியதாரர்கள் நவ. 30-க்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2017

இபிஎப்ஓ ஓய்வூதியதாரர்கள் நவ. 30-க்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய ஆயுள் சான்றிதழை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதை அளிக்கத் தவறுவோர் தொடர்ந்துஓய்வூதியம் பெற முடியாது. இதன்படி, இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த ஆயுள் சான்றிதழை மத்திய அரசின் ‘ஜீவன் பிரதான்’ இணையத்தில் இருந்து பெறலாம். அதேபோல், பொது சேவை மையங்களிலும் ஆயுள் சான்றிதழ் பெறலாம். ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள இபிஎப்ஓ அலுவலகத்தில் நேரிலோ சமர்ப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி