குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2017

குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடுஅறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாடு, சென்னையில், இன்று துவங்குகிறது.
சோழிங்கநல்லுாரில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில், இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட, 150க்கும் மேற்பட்ட மாணவர்களின்புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் செய்முறை திட்டங்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.இன்று மாலை, 4:00 மணிக்கு, அறிவியல் விழிப்புணர்வு பேரணியை, மாணவர்கள் நடத்த உள்ளனர். இதில், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு, மாநாடு துவங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி