பள்ளிகளில் மாணவர் வருகை சரிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2018

பள்ளிகளில் மாணவர் வருகை சரிவு

அரசு பஸ் ஊழியர்கள், கடந்த, 4 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த, சனி, ஞாயிற்று கிழமைகளில், பள்ளிகள் விடுமுறை என்பதால், பள்ளி, கல்லுாரி வாகன டிரைவர்கள் உதவியுடன், அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
திங்கள்கிழமை பள்ளிகள் திறந்து, அரசு, தனியார் அலுவலக பணிகள் துவங்கிய நிலையில், பஸ் போக்குவரத்து இல்லாததால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலும், பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை போன்ற பெருநகரங்கள் உட்பட, அனைத்து இடங்களிலும், பள்ளி, கல்லுாரிகளுக்கு வரும் மாணவ - மாணவியர் பஸ் வசதி இன்றி, வகுப்புகளுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக, வருகை பதிவு, 50சதவீதம் குறைந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.பள்ளிகளுக்கு நீண்ட துாரத்தில் இருந்து, பஸ்சில் வரும் ஆசிரியர்களும், வகுப்புகளுக்கு வர முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

சிலர், பல மணி நேரம் தாமதமாக வருகின்றனர். மேலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, காலை மற்றும் மாலையில் நடக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகளிலும், மாணவர்கள்பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி