வேகமெடுக்கும் பள்ளிச் சீருடை தயாரிப்புத் துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2018

வேகமெடுக்கும் பள்ளிச் சீருடை தயாரிப்புத் துறை!

நாடு தழுவிய அளவில் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில்,மாணவர்களுக்கான பள்ளிச் சீருடை தயாரிப்புத் துறையின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது.
இதன் காரணமாக, அத்துறையின் சந்தை மதிப்பு சந்தை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும் என்கிறார் சோலாப்பூர் ஆயத்த ஆடை தொழிற் கூட்டமைப்பின் துணைத் தலைவர் நிலேஷ் ஷா.மத்திய மாநில அரசுகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், நகர்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களிடமும் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.

இதன் பயனாக, மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்து வருவதையடுத்து, பள்ளிச் சீருடை தயாரிப்பு துறை சந்தை ராக்கெட் வேக வளர்ச்சியை கண்டு வருகிறது.தற்போதைய நிலையில், பள்ளிச் சீருடைகளுக்கான சந்தையின் மதிப்பு ரூ.18,000 கோடி என்ற அளவில்தான் உள்ளது. அதில், அமைப்பு சார்ந்த துறை நிறுவனங்களின் பங்களிப்பு 10,000 கோடி. எஞ்சிய பங்களிப்பை அமைப்பு சாரா துறை நிறுவனங்கள்தான் வழங்கி வருகின்றன.

நாடு முழுவதும் கல்விக்கு கிடைக்கும் வரவேற்பையடுத்து வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் பள்ளிச் சீருடை சந்தை ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும். பள்ளிச் சீருடைத் தயாரிப்பில் மஹாராஷ்டிராவின் சோலப்பூர் மாவட்டம் முக்கிய கேந்திரமாக விளங்கி வருகிறது.

தற்போதைய நிலையில், இங்கு சுமார் 1,000 நிறுவனங்கள்பள்ளிச் சீருடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் மேலும் கூடுதலாக 2,000நிறுவனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்கிறார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி