போனஸ் பணம் கைக்கு வரவில்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2018

போனஸ் பணம் கைக்கு வரவில்லை!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு, கடந்த, 8ல் வெளியானது. கடந்த, 9ல், அனைத்து அலுவலகங்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டது.
ஆனால், அறிவிக்கப்பட்ட போனஸ், நேற்று மாலை வரை யாருக்கும் வழங்கப்படவில்லை.

இது குறித்து, கருவூலத்தில் விசாரித்தபோது, 'பொங்கலுக்கு பிறகே, வங்கி கணக்கில் போனஸ் பணம் வரும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் கூறுகையில், ''அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில், சி மற்றும் டி பிரிவினர், பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு, பொங்கலுக்கு முன், போனஸ் தொகையை, வங்கி கணக்கில் செலுத்தினால், கடன் வாங்கும் நிலை ஏற்படாது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி