மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2018

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு

'மொபைல் போன் எண்களை, 13 இலக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை' என, 'டிராய்' எனப்படும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள், 10 இலக்கங்கள் உடையதாக உள்ளன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு, 'சிம்கார்டு' வழங்கி வருகின்றன.இந்நிலையில், வரும் ஜுலை, 1 முதல், வாடிக்கையாளர்களுக்கு, 13 இலக்க எண்கள் உடைய, சிம் கார்டு வழங்கும்படி, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இப்போதுள்ள 10 இலக்க எண்களை, 13 இலக்கமாக மாற்றும் நடைமுறையை அக்டோபர், 1ல் துவங்கி, டிசம்பர், 31க்குள் முடிக்க வேண்டும் என, உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது; இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால், இதை டிராய் மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதாரண மொபைல் போன்களின் எண்களை, 13 இலக்கமாக மாற்ற, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை; அது போன்ற எண்ணமும் இல்லை. மாறாக, 'மிஷின் டு மிஷின்' எனப்படும், விமானங்கள், கப்பல்கள் போன்ற போக்குவரத்து துறைகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும்,'சிம்' கார்டுகளின் எண்கள் மட்டும், 13 இலக்கமாக மாற்றப்படும்.மேலும், இணையம் வாயிலாக இயங்கும், 'ஸ்வைப்பிங் மிஷின்'களுக்கான, பிரத்யேக எண்களும், தற்போதுள்ள, 10 இலக்கத்திலிருந்து, 13 இலக்கமாக மாற்றப்படும்.

இந்த நடைமுறை, ஜூலை, 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும், இப்போதுள்ள, 10 இலக்க எண்களை, 13 இலக்கமாக மாற்றும் நடவடிக்கையை, அக்டோபர், 1ல் துவக்கி, டிச. 31க்குள் முடிக்க, தொலை தொடர்பு நிறுவனங்களை, தொலை தொடர்புத்துறை வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி