தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க உயர்நீதிமன்றம் ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2018

தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க உயர்நீதிமன்றம் ஆணை

தனியார் பள்ளிகள் மத்திய, மாநில கல்வி வாரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கீகாரம் பெற விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தால் அது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் வழங்கலாமா வேண்டாமா என்பது பற்றி மத்திய கல்வி வாரியம் தான் முடிவுசெய்யும் என நீதிபதிகள் கூறியுள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. சுந்தரபாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி