தேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2018

தேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்துறை

பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்குஆண்டுத் தேர்வும் நடந்து வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதனால், மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரத்தில் கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் பணி காரணமாக 30க்கும் குறைவானரே பங்கேற்றனர்.மார்ச் 26ல் நடந்த மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் தேர்வு காரணமாக மாணவர்கள் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், 'கேலோ இந்தியா' மாநில விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட மகளிர் அணி தேர்வுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில் 30க்கும் குறைவான மகளிரே பங்கேற்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி