இரு கல்வி திட்டங்கள் இணைப்பு வீண் செலவை குறைக்க ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2018

இரு கல்வி திட்டங்கள் இணைப்பு வீண் செலவை குறைக்க ஏற்பாடு

மத்திய அரசின் இரண்டு கல்வி திட்டங்கள், ஒன்றாக இணைக்கப் படுவதால்,மத்திய, மாநில அரசுகளுக்கு, பல கோடி ரூபாய் செலவு குறையும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு சார்பில், ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், எஸ்.எஸ்.ஏ., என்ற, அனை வருக்கும் கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் அமலில் உள்ளன. இரு திட்டங்களுக்கும், தனியாக இயக்குனர்கள், இணை இயக்குனர், ஒருங்கிணைப்பாளர்கள், தனி அலுவலகம் என,பல கோடி ரூபாய் நிர்வாக பணிகளுக்காக செலவிடப்படுகிறது.மத்திய, மாநில அரசுகளின் செலவுகளை குறைக்கும் வகையில், இந்த இரு திட்டங்களையும் இணைத்து செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு, அனைத்து மாநில அரசுகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டில், இரு திட்ட இயக்குனரகங் களும் இணைக்கப்பட்டு, ஒரே திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இரு திட்டங்களின் இணைப்பை தொடர்ந்து, மாநிலம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் விபரங்களை திரட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி