முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு ஆயவு் நிதி (PhD Scholarship) உதவிக்கு விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2018

முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு ஆயவு் நிதி (PhD Scholarship) உதவிக்கு விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை!!

#PhD #HowtoapproachProfessors

முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு ஆயவு் நிதி (PhD Scholarship) உதவி ஏதேனும் கிடைக்குமா? என பேராசிரியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் கடிதம் (cover letter) மிக முக்கியமானது.


வெளிநாட்டில் உள்ள‌ பேராசிரியர்களை தொடர்பு கொள்ளும் போது 15 விசயங்களை கட்டாயம் கடை பிடித்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்.

1. உங்கள் கல்விப் பின்புலம் (academic background)
2. ஏன் குறிப்பிட்ட பேராசிரியரை தொடர்பு கொள்கிறீர்கள் (அப்பேராசிரியர் குழுவின் ஆராய்ச்சிக் கட்டுரையினை வாசித்து விட்டு குறிப்பிடலாம்) (research back ground)
3. குறிப்பிட்ட ஆய்வுக் குழுவில் நீங்கள் என்ன கற்றுக் கொள்ள போகிறீர்கள்? நீங்கள் என்ன பங்களிப்பீர்கள்? (learning and contribution)
4. உங்களது முதுநிலை கால கட்டத்தில் குறிப்பிட்டத்தக்க சாதனைகள் ஏதேனும் புரிந்திருந்தால் இரண்டு வரியில் குறிப்பிடலாம். (achievement)
5. வாய்ப்பு இருந்தால் தெரிவியுங்கள் என்று பேராசிரியருக்கு வேலை சொல்வதை விட, தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் என சொல்வதே நலம் (diplomacy).
6. உங்களைப் பற்றிய resume  2-3 பக்கத்திற்குள் இருப்பது நலம் (short biography).
7. தங்களுக்கு தெரிந்தவற்றையும் (hands of experience), ஆர்வமுள்ளவற்றையும் (research interest) தனித்தனியாக குறிப்பிடவும். எல்லாமே தெரியும் என குறிப்பிட்டால் அவை உங்களது நம்பகத் தன்மையினை குறைத்து மதிப்பிடவே வழி வகுக்கும்
8. முது நிலையின் போது நீங்கள் செய்த பிராஜக்ட் குறித்து இரண்டு பக்கங்களில் சுருக்கமாக (abstract) எழுதவும். இந்த திட்டம் தங்களுக்கு எத்தையக அறிவியல் நுட்ப புரிதலை தந்தது (understanding) என எழுதவும். இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக அடுத்த நிலையில் என்ன கற்க விரும்புகிறீர்கள் (future plan) என சுருக்கமாக குறிப்பிடவும். இப்பகுதியில் அப்பேராசிரியரின் குழுவினருடன் எதேனும் ஒரு புள்ளி ஒத்துப் போகுமாறு இருந்தால் நலம்.
9. கடிதத்தில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி பெருக்கு (enthusiastic), நன்றி நவிழல் (too much praising) தேவையில்லை. அதே நேரம் கொஞ்சம் மரியாதையுடன் (politeness) எழுதுதல் உங்களைப் பற்றிய பாசிடிவ் எண்ணத்தை ஏற்படுத்தும்.
10. பேராசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு உடனே பதில் தருமாறு மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது எரிச்சலைத் தரும் (frequent reminders). வெளிநாடுகளில் பணி புரியும் பேராசிரியர்களுக்கு பணிச்சுமை மிக அதிகம். ஆகவே ஓய்வு நேரத்தில் மட்டுமே அவர்கள் பதில் தர இயலும்.
11. குறிப்பிட்ட பேராசிரியரிடம் ஆய்வு நிதி இல்லாவிட்டாலும் உங்கள்
, மற்றும் உங்களின் அணுகுமுறை (behaviour) பிடித்துப் போகும் பட்சத்தில் அவரது நண்பர்கள் குழுவிற்கு உங்களைப் பரிந்துரைக்க (referring to others) வாய்ப்புள்ளது. ஆகவே நீங்கள் எப்படி ஒருவரை தொடர்பு கொள்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.
12. Resume, cover letter எழுதுவது எப்படி என இணைய தளத்தில் இருந்து கொஞ்சம் பயிற்சி செய்யலாம். உங்கள் நட்பு வட்டத்தில் யாரேனும் வெளிநாடுகளில் ஆராய்ச்சித் துறையில் பணி புரிபவர்களிடம் ஒரு முறை உங்கள் கடிதத்தை தந்து ஆலோசனை (friendly advise) கேட்கலாம்.
13. உங்களுக்கு நன்கு அறிமுகமாகிய‌ இந்திய பேராசிரியர்களின் பெயரை ரெபரன்சாக தரவும். ரெபரன்ஸ் பகுதியில் இரண்டு பேராசிரியர்களின் பெயரைத் தரவும். அதில் ஒருவர் உங்கள் முதுநிலை பிராஜக்ட் வழிகாட்டியாக (guide) இருந்தால் இன்னும் நலம்ம். அவர்களது மின்னஞ்சல், தொலைபேசி எண்ணை குறிப்பிடவும். இயன்றவரை அவரது தகவல் அவர் பணி புரியும் கல்வி நிறுவனத்தின் வெப்சைட்டில் இருந்தால் அந்த முகவரியினையும் குறிப்பிடலாம். நீங்கள் ரெபரன்சாக அவரது பெயரை தரும் முன்பு அவரது ஒப்புதலைக் கட்டாயம் பெறவும்.
14. ஒரே கடிதத்தை அப்படியே பெயரை மட்டும் மாற்றி மற்ற பேராசிரியர்களுக்கு அனுப்பாதீர்கள். ஒவ்வொரு கடிதமும் தனித்தன்மையோடு (uniqueness) இருக்க வேண்டும்.
15. உலகம் முழுவதும் ஆய்வுப் பணிகளுக்கென தனித்த இணையதளங்கள் (research job portals) உள்ளது. இயன்றவரை வாரம் ஒரு முறை இந்த தளங்களில் வெளியாகும் வாய்ப்புகளை தொடர்ந்து கண்காணித்து வரலாம்.

ஒவ்வொரு வாய்ப்பும் மேன்மையானது. வாய்ப்புகள் கதவை தட்டும் போது,  அதனை வாசற்படியிலேயே தவற விடாதீர்கள்.

வாழ்த்துகள்!

- முனைவர் Sudhagar Pitchaimuthu
   சுவான்சி பல்கலைக் கழகம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி