இந்நிலையில் ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆசிரியர் பகவான். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 5 வருடமாக அங்கு பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் ஆசிரியர் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
இதனிடையே, ஆசிரியர் பகவான் இடமாறுதல் ஆக இருப்பது குறித்து தகவல் அறிந்த பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் சோகம் அடைந்தனர். சிறந்த ஆசிரியரான பகவான் எங்கள் பள்ளியை விட்டு மாறுதலாகி வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இடம் மாறுதலுக்கான கடிதத்தை வாங்கி செல்வதற்காக கடந்த 20ஆம் தேதி பள்ளி வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் இந்த பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.
பின்னர் மாணவர்களை ஆழக்கூடாது என ஆறுதல் படுத்திவிட்டு, பள்ளியில் இருந்த ஆசிரியர் பகவான் வெளியே செல்ல முயன்றார். அப்போது மாணவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு அவரை கட்டிப்படித்து கதறி அழுது துடித்தனர். இதனால் ஆசிரியார் பகவானும் செய்வதறியாது கண்ணீர் விட்டு அழுதார்.
வெகுநேரமாக நடந்த இந்த பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த ஆசிரியர் பகவானும் கலங்கிய கண்களுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார். மாணவர்களின் இந்த பாசப்போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர். இதனால் ஆசிரியர் பகவான் பணிநிரவல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் பகவான் வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
🙏🙏🙏👌👌👌
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteKALLVI THURAIKU MIKKA NANNDRI
ReplyDeleteதலை வணங்குகின்றேன் பகவான் Sir...
ReplyDeleteகல்வி துறைக்கு மிக்க நன்றி
ReplyDeleteநீங்கள் செய்தது சாதனை,
ReplyDeleteநீங்கள் போக இருந்தததோ மாணவர்களுக்கு வேதனை,
நீங்கள் தான் ஹீரோ
நல்வாழ்த்துக்கள்!
கல்வி துறைக்கு மிக்க நன்றி
ReplyDeleteI salute u sir
ReplyDeleteI salute u sir
ReplyDeleteBAGAVAN SIR, UNDOUBTEDLY YOU HAVE CREATED OTHER TEACHERS THINKING OF YOUR NATURE TOWARDS STUDENTS. IF IT IS SO TAMIL NADU IS THE BEST IN EDUCATION
ReplyDeleteCongratulations to the students.
ReplyDeleteகல்வித் துறைக்கு மனமார்ந்த பாராட்டுகள்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteedhu oru ponmalai pulithu
ReplyDeletebhagavane Palli karunai school-ai vittu sella vendam. Thank you for Tamil nadu School education. Acted favour of school students as fastly cancelled Transfer order English Master Bhagavan.
Deleteபாராட்டுக்கள்
ReplyDeleteCongratulations...
ReplyDeleteYour a real hero
ReplyDeleteYour a real hero
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDone good job kalvithurai, congrats
ReplyDeletecongrats bro
ReplyDeleteஅரசுப்பள்ளி ஆசிரியர்களின் தரத்திற்கு ஒரு சான்று திரு பகவான் அவர்கள் 👍👍
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteEducation is Empower......Hearty wishes.
ReplyDeleteCongrats Bhagavan sir
ReplyDeleteCongrats Bhagavan sir
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழா.....👍👍👍
ReplyDeleteEngda eppai usppu ethirunga
ReplyDeleteதலை வணங்குகிறேன் சகோதரா........
ReplyDeleteவாழ்த்துக்கள் பகவான் ஆசிரியரே.
ReplyDeleteமேலும் நன் மாணாக்கர் பலரை உருவாக்க சக ஆசிரியனாக வாழ்த்துகள்
ReplyDeleteavaru 5 varusam velai seithara therinjukkitu news podunga sir
ReplyDeleteMy hearty wishes to you sir
ReplyDeleteit is example for govt school
ReplyDelete