தூத்துக்குடி வர பிரதமர் மோடிக்கு மாணவிகள் அழைப்பு : கலந்துரையாடலில் வருவதாக உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2018

தூத்துக்குடி வர பிரதமர் மோடிக்கு மாணவிகள் அழைப்பு : கலந்துரையாடலில் வருவதாக உறுதி

பாஜக அரசு மத்தியில் பதவியேற்று 4 ஆண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பல திட்ட பயனாளிகளிடம் உரையாடி வருகிறார்.
அதன்படி இன்று ஸ்டார்ட் அப் திட்டத்தில் பயனடைந்த தொழிலதிபர்களிடம் பிரதமர் மோடி உரையாடினார். சிறிய கிராமங்களில் மட்டுமல்ல, மிகப்பெரிய நகரங்களிலும் ஸ்டார்ட் அப் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமையோடு பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி தனியார் பள்ளி மாணவிகளிடம் பிரதமர் மோடி உரையாடினார்.

மோடியிடம் மாணவிகள், தாங்கள் வடிவமைத்த சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட, நவீன நீர் பாசன இயந்திரம் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர், இந்த நவீன இயந்திரத்தை, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக தூத்துக்குடி வரவேண்டும் என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தனர். முதல் தமிழில் வணக்கம் என்று கூறிய மோடி தூத்துக்குடி வருவதாக உறுதியளித்தார்.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி