இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நிறைவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2018

இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நிறைவு

அண்ணா பல்கலை ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நாளையுடன் முடிகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், மாணவர்களைச் சேர்க்க, ஆன்லைன் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 2ல் முடிந்தது; 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துஉள்ளனர். இதையடுத்து, கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்த வர்களுக்கு, ஜூன், 8ல், சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்களுக்கு, மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள, உதவி மையத்தில், நேற்றுடன் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது. மற்ற, 40 மையங்களில், நாளையுடன் சான்றிதழ் சரிபார்ப்பு முடிகிறது.

சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, உதவி மையத்தில் மட்டும், வரும், 17ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. மற்ற மாவட்டங்களில், குறிப்பிட்ட நேரத்துக்கு வர முடியாதவர்கள், 17ம் தேதி, சென்னை உதவி மையத்திற்கு வந்து, தங்கள் சான்றிதழ்களை சரிபார்க்கலாம் என, இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி