கல்வி மாவட்டங்கள் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு அதிகாரிகளுக்கு வாகனம் கொடுக்காமல் அரசு மெத்தனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2018

கல்வி மாவட்டங்கள் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு அதிகாரிகளுக்கு வாகனம் கொடுக்காமல் அரசு மெத்தனம்

புதிதாக நியமிக்கப்பட்ட 128 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு வாகனம் ஒதுக்கீடு செய்யாததால் ஆய்வுப்பணிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழக பள்ளிக் கல்வியில் நிர்வாக சீர்திருத்தம் செய்வதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அதிக அளவில் அதிகாரம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி 68 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடம் 128 இடங்களாக உயர்த்தப்பட்டு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாவட்டங்களில் உள்ள தொடக்க  மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை நியமிப்பது, மாறுதல் உத்தரவுகள் பிறப்பிப்பது, பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்வது என பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்ய உள்ளனர். இது தவிர பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை மேற்பார்வையிடவும் உள்ளனர். புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு அரசு பள்ளியை தேர்வு செய்து அதில் அவர்களுக்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வுசெய்ய வசதியாக வாகனங்கள் ஒதுக்கீடு செய்யவில்லை. அதனால், மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தொடக்க கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் விரைவில் வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி