பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் நேற்று ஓய்வுபெற்றதையடுத்து ராமேஸ்வரமுருகன் தமிழக அரசால் பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் நேற்றுஓய்வு பெற்றார்.இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது பணியாற்றி வரும் ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் நேற்றுடன் ஓய்வு பெற்றார். தற்போது மத்திய இடைநிலை கல்வி திட்டத்தின் இயக்குனராக உள்ள ராமேஸ்வரமுருகன் பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 2014ம் ஆண்டு இவர் ஏற்கனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ஜூலை 1ம் தேதி முதல் காலியாக உள்ள பள்ளிக்கல்விஇயக்குனர் பணியிடத்துக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் கூடுதல் இயக்குனராக பணிபுரியும் ராமேஸ்வரமுருகனை பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது. என்றுகூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி