அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு தொடர்பான பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2018

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு தொடர்பான பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது:
அரசுப் பள்ளிகளில் படிக்கும் 20,000 மாணவர்களுக்கு 500 தணிக்கையாளர்கள் மூலம் சி.ஏ. படிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக முதல் கட்டமாக ஈரோட்டில் 2,700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

பிளஸ் 2 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 12 வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும். நீட் தேர்வுக்கு 412 மையங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணி நேரமும் மற்றும் விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி