10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது - பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2018

10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது - பள்ளிக் கல்வித்துறை


10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புவெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை, தனித்தேர்வராக எழுதலாம்என்று விதிமுறை இருந்தது. இந்நிலையில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

தமிழகத்தில் இதுவரை பள்ளி இறுதி பொதுத்தேர்வை எழுதித் தேர்ச்சிபெற்றவர்கள் நேரடியாக +2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை, தனித்தேர்வராக எழுத இயலும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் தற்பொழுது + 1 எனப்படும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வும் அரசு பொதுத் தேர்வாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது. அவர்கள் +1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்ற பின்னால்தான், +2 தேர்வினை எழுத முடியும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தோல்வியுற்ற மாணவர்களுக்கான  பழைய திட்டம் மார்ச் 2019 வரை மட்டுமே அமல்" - தேர்வுத்துறை இயக்குனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி