வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதனால் நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் பிற பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சி 10 செமீ, சின்னக்கல்லார் - 9 செமீ, வால்பாறை - 8 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
வடக்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிக்கும், அந்தமான் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கேரளத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி