சுதந்திர தின விழா கவிதை - ஆசிரியர் திரு.சீனி.தனஞ்செழியன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2018

சுதந்திர தின விழா கவிதை - ஆசிரியர் திரு.சீனி.தனஞ்செழியன்

தாய் மண்ணே வணக்கம்
*********************************


அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம்
மிஞ்சி பேசி மாய்ந்த சோகம்
உயிர்வதைய இறுதிவரை நிலைத்த தியாகம்
ரத்தமும் சதையுமாய் உறவிழந்து கதறிய கண்ணீர்கோலம்
இவைகள்
மொத்தத்திற்குமான முற்றுப்புள்ளி
வீர சுதந்திரம்

உரிமைகள் தொலைத்து
உயிர் பல கொடுத்து
போராடி கண்ட பெருவிழா
நம் ஒவ்வொருவருக்குமான திருவிழா

எத்தனை எத்தனை தடியடிகள்
எண்ணிலடங்கா கசையடிகள்
இப்படித்தான் கழிந்தன பலநொடிகள்
அதை நொறுக்கிக் கண்ட பொன் விடியல்
உயிர் இனிக்கும் இந்த சுதந்திரப்படையல்

வரி மறுத்து
மேலை உடை வெறுத்து
செக்கிழுத்து உயிர்சிதைந்து
துயர் பல தாண்டி பெற்ற உயிர்
தழைத்து நிற்குமிந்த
சுதந்திரப் பயிர்

முன்னோர்தம் தியாகம் அறிவோம்
அவர்களின்றி ஏது இந்த அளவிடற்கரிய ஆனந்தம்?
அவர்களால்
இன்று தேசம் நமக்குச் சொந்தம்

அடிமை விலங்கினைப் பொடிப்பொடியாக்கிய வீர மறவர்க்கு 
நெஞ்சு நிமிர்த்தி அடிப்போம் 
ஒரு ராயல் சல்யூட்


உதிரம் தந்து உவகை நல்கிய மறவர்களை நெஞ்சில் சுமப்போம்
வீசும் காற்றில் அசையும் கொடியினில் சுதந்திரம் உணர்வோம்
பாரத பூமியின் புதல்வர்கள் நாமும் தேசம் உச்சம் காண சூளுரைப்போம்
சுடரொளி பரவ சுகித்திருப்போம்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்



சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்-632515.
வேலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி