தலைமை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! Last Date : August 20 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2018

தலைமை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! Last Date : August 20

 'ஏகலைவா' மாதிரி உண்டி உறைவிடப்பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு, ஆக., 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில், பழங்குடியினர் நலத்துறையின் கீழ், ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் செயல்படுகின்றன. விழுப்புரம், நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கி வரும், ஏகலைவா மேல்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. இப்பணியில் சேர, சி.பி.எஸ்.இ.,யின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை, ஆக., 20க்குள், 'இயக்குனர், பழங்குடியினர் நல இயக்குனரகம், சேப்பாக்கம், சென்னை - 5' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி