தீபாவளியன்று அதிக சப்தமுள்ள பட்டாசுகளை மாணவர்கள் வெடிக்க வேண்டாம்: இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பேச்சு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2018

தீபாவளியன்று அதிக சப்தமுள்ள பட்டாசுகளை மாணவர்கள் வெடிக்க வேண்டாம்: இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பேச்சு...


அன்னவாசல்,நவ.1:தீபாவளியன்று அதிக சப்தமுள்ள பட்டாசுகளை  மாணவர்கள் வெடிக்க வேண்டாம் என இலுப்பூர்  மாவட்ட  கல்வி அலுவலர் க.குணசேகரன் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கீழக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டாசு வெடிப்பதால் மாசு மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது..

  முகாமிற்கு வந்திருந்தவர்களை ஜீ.வி.என்.அறக்கட்டளை இயக்குநர்  சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார்..

இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் தலைமை தாங்கிப் பேசியதாவது:  தீபாவளியன்று  பட்டாசு வெடிப்பதால் மாசு மற்றும் சுற்றுச் சூழல் பல்வேறு வழிகளில் மாசுபடுகிறது...குறிப்பாக காற்று ஒலி அதிகளவில் மாசடைகிறது..காற்று ஒலி மாசுபடுவதினால் பல்வேறு விதமான நோய்களும் உருவாகிறது..இதில் பெருமளவில் குழந்தைகள் தான் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்..எனவே மாணவர்கள் பாதுகாப்பான முறையில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள குறிப்பிட்ட நேரத்திற்குள் குறைந்த டெசிபல் உள்ள பட்டாசுகளை மட்டும் வேண்டும்..அதிக சத்தமுள்ள பட்டாசுகளை மாணவர்கள் வெடிக்க வேண்டாம்.ஏனெனில் அது உங்களது மனநிலையையும் பாதிக்கும்.காதுகள் பாதிக்கப் படக் கூடும்..மாணவர்கள் ஒரு நாள் கொண்டாத்திற்காக வாழ்நாள்  முழுவதும் துன்பப் பட வேண்டாம்..மேலும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா தீபாவளியை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றார்..

பள்ளியின் உதவி தலைமைஆசிரியர் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார்.

மாசுமற்றும் சுற்றுச் சூழல் குறித்து பாரதிதாசன் பல்கலைக் கழக சமூகவியல் துறை தலைவர் குபேந்திரன்,சுற்றுச் சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் காமராசு,இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கருணாநிதி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்..

முடிவில் ஜீ.வி.என் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தனபாக்கியம் நன்றி கூறினார்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி