TNPSC - நுாலகர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2018

TNPSC - நுாலகர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு!


நுாலகர் பதவிக்கான தேர்வு தேதியை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அண்ணா நுாற்றாண்டு நுாலகம், தொழில் துறை, வேளாண் துறை, சட்டசபை போன்றவற்றில் காலியாக உள்ள, 29 நுாலகர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, 2019 பிப்., 23ல் நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது. திடீரென தேர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக, டிச., 18ல், தெரிவித்தது.

இதையடுத்து, நிறுத்தி வைக்கப்பட்ட நுாலகர் பதவிக்கான தேர்வு, மார்ச்சில் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் அறிவித்துள்ளார். இதன்படி, தொல்பொருளியல் துறை நுாலகர் பதவிக்கு, மார்ச், 31; மற்ற துறை நுாலகர் பதவி களுக்கு, மார்ச், 30லும் தேர்வு நடைபெற உள்ளது.'குரூப் - 2' பதவிகளுக்கான பிரதான தேர்வு, பிப்., 23ல் நடத்தப்படுவதால், புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி