அங்கன்வாடியில் சேர உள்ள எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு இலவசமாக 4 செட் சீருடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2019

அங்கன்வாடியில் சேர உள்ள எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு இலவசமாக 4 செட் சீருடை


அங்கன்வாடி மையங்களில் படிக்கும் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, செருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனை தொடர்ந்து குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் வகையில், மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடியில் துவங்க அரசுமுடிவு செய்தது. அதன்படி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் வரும் 21ம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், 52 ஆயிரத்து 933 குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். எல்கேஜி வகுப்பில் 3 முதல் 4 வயதான குழந்தைகளும், யுகேஜி வகுப்பில் 4 வயது முதல் 5 வயதான குழந்தைகளும் சேர்க்கப்படுவார்கள். இந்த குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தமிழக அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு 4 செட் சீருடை, ஒரு ஜோடி செருப்பு, மலைப்பகுதி குழந்தைகளுக்கு ஒரு ஸ்வெட்டர், மழைக்காலத்தில் பயன்படுத்தும் ெரயின்கோட், கலர் பென்சில், பாட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ரூ.773.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு குழந்தைக்கு 4 செட் சீருடைக்கு ரூ.960, செருப்பு ரூ.144.90, மலைப்பகுதி குழந்தைகள் 471 பேருக்கு ஒரு ஸ்வெட்டர் ரூ.208.30, 471 குழந்தைகளுக்கு ஒரு ரெயின்கோர்ட் ரூ.323.92 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் சோதனை அடிப்படையில் 3 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இதனை தொடர்ந்து குழந்தைகளின் வருகை, கற்றுக்கொள்ளும் திறன் தொடர்பாக மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கன்வாடி மையங்களில்நாளை முதல் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி