பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்க ரூ.1,362 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2019

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்க ரூ.1,362 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.1,362.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வியை எளிதாக பெறுவதற்கும், தரத்தை மேம்படுத்தவும் 2011-ம் ஆண்டு முதல் இந்த அரசு 247 தொடக்கப் பள்ளிகளை புதிதாக தொடங்கியுள்ளது.

 116 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 1,079 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 604 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியுள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிறுவுவதற்கான இலக்கினை இந்த அரசு முழுமையாக எட்டியுள்ளது.தொடக்கநிலை வகுப்புகளில் நிகர சேர்க்கை 99.8 சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-12-ம் ஆண்டில் 63,178 ஆக இருந்த தொடக்கப் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2018-19-ம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது. தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஒப்பிடும்போது, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கூடுதல் வேகத்தில் முன்னேறி வருகின்றனர்.

புத்தகப் பைகள், காலணிகள், நோட்டு மற்றும் பாடப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உட்பட மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2019-20-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1,656.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைக்க 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் ரூ.5 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகையாக இந்த அரசு தொடர்ந்து வழங்கும்.

இதற்காக வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்ரூ.313.58 கோடியும், மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.1,362.27 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு போதுமான உட்கட்டமைப்பை வழங்க நபார்டு வங்கியின் கடனுதவியுடன் ரூ.381.31 கோடி செலவில் வகுப்பறை கட்டுதல், ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும்.

1 comment:

  1. அத்தியாவசிய தேவை எல்லாம் செஞ்சு குடுக்காம மடிக்கணினி யாரு கேட்டா??? எல்லாமே விளம்பரம், ஒரு மடிக்கணினி 35000 ரூபாய்னு வெச்சா கூட 390000 மடிக்கணினி வாங்கி அத மாணவர்களுக்கு குடுக்க போறிங்களா???
    அடிப்படை கட்டமைப்பு வசதி எதுவுமே செய்ய முடியல... கட்டிடங்கள் வலுவா இல்ல, கழிப்பிட வசதி இல்ல, விளையாட்டு மைதானம் சரியா இல்ல, வகுப்பறைல குறைபாடு, இதெல்லாம் பெருசா தெரியல, ஆனா லேப்டாப் மட்டும் குடுத்து மக்களை பிச்சை காரனா மாத்திட்டு இருக்கோம்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி