வருமான வரித் தாக்கல் விண்ணப்பங்கள் 24 மணி நேரத்துக்குள் பரிசீலனை: மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2019

வருமான வரித் தாக்கல் விண்ணப்பங்கள் 24 மணி நேரத்துக்குள் பரிசீலனை: மத்திய அரசு


வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் விண்ணப்பங்களை 24 மணி நேரத்துக்குள் பரிசீலித்து, பணத்தைத் திருப்பி அளிக்கும் வகையிலான வழிமுறைகள், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இது குறித்து வருவாய் செயலர் அஜய் பூஷண் பாண்டே செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வருமான வரி செலுத்தும் பெரும்பாலானோர் தற்போது இணையவழியிலேயே தங்களது வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்து வருகின்றனர். அவற்றின் மீதான பரிசீலனைகளும் இணையவழியில் நடைபெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டில், பரிசீலனை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பிலான தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் 24 மணி நேரத்துக்குள் முடிக்கும் நோக்கில், நேரடி வரிவிதிப்பு ஆணையத்தின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 4,200 கோடியை மத்திய அரசு கடந்த மாதம் ஒதுக்கீடு செய்தது. அடுத்த 2 ஆண்டுகளில், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடையும்.
அதன்பிறகு, வருமான வரி செலுத்தும் நடவடிக்கைகளில் முழு வெளிப்படைத்தன்மை ஏற்படும். மேலும், பணியாளர் தலையீடும் குறையும் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி