குரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற ஏப்.20 கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2019

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற ஏப்.20 கடைசி நாள்


குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எழுதுவோர் அதற்கான உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஏப்ரல் 20-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:குரூப் 1 பிரிவில் அடங்கியுள்ள துணை ஆட்சியர்,  காவல் துறை துணைக்  கண்காணிப்பாளர், வணிக வரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்டப் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட அலுவலர் ஆகிய பதவிகளுக்கான 181 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு முடிவுகள்கடந்த மாதம் வெளியிடப்பட்டன.இதன்பின், முதன்மைத் தேர்வு வரும் ஜூலை 12-இல் தொடங்கி 14-இல் நிறைவடைகிறது. இந்தத் தேர்வுக்காக 9 ஆயிரத்து 850 பேர் தற்காலிகமாகத்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதன்மைத் தேர்வுக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது மூலச் சான்றிதழ்களை வரும் 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை  தேர்வாணைய இணையதளத்தில்  (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி