அரசுப்பள்ளி ஆசிரியருக்குச் சிறந்த இயற்கைக் காவலர் விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2019

அரசுப்பள்ளி ஆசிரியருக்குச் சிறந்த இயற்கைக் காவலர் விருது


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் முனைவர் மணி.கணேசன் அவர்களது கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் மூலமாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை வழங்கி நட்டு வளர்த்து வரும் சேவையைப் பாராட்டி அண்மையில் திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம்.பொறியியல் கல்லூரியில் இயற்கையின் உறவுகள் மாநாடு மற்றும் விருது விழாவில் சிறந்த இயற்கைக் காவலர் விருதினை முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பேரனும் டாக்டர் கலாம் விஷன் 2020 இன் நிறுவனருமான செய்யது தாவூத் என்பவரால்  வழங்கப்பட்டது. 

விருது பெற்ற ஆசிரியரின் இருபதாண்டு கால மரம் வளர்ப்புப் பணியினைக் கிரீன் நீடா இராஜவேலு, பசுமைக் கரங்கள் கைலாசம், ஜேசீஐ இராஜகோபால், அப்துல்கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்க நிர்வாகி ரியாஸ் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி