புதிய கல்விக்கொள்கை காலக்கெடு நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2019

புதிய கல்விக்கொள்கை காலக்கெடு நீட்டிப்பு


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு ஜூலை ௩௧ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் ௩௦ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

அந்த கெடு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது; ஜூலை ௩௧ வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதுபோல பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தில் மாற்றம் செய்து காலை உணவுவழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.இவ்வாறு அமைச்சர் பொக்ரியால் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி