பட்டுக்கோட்டை தாலுக்காவில் அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற பாலமுரளிக்கு ஆசிரியர்கள், முன்னாள் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.பட்டுக்கோட்டை தாலுக்கா பொன்னவராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மகன் பாலமுரளி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல்முறையே தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை தேவேந்திரன் ஓய்வுபெற்ற அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆவார். தாய் அல்லிக்கொடி, சகோதரி ரம்யா. இவர், பல் டாக்டராக பணிபுரிகிறார். பாலமுரளியின் அண்ணன் உமாசங்கர் விவசாயம் செய்து வருகிறார்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற பாலமுரளி, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி.,யும், நாட்டுச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வும் படித்தார். இதைத்தொடர்ந்து பிடெக் படிப்பை காரைக்குடி சி.இ.சி.ஆர்.ஐ., கல்லூரியிலும் முடித்துள்ளார்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே பாலமுரளி தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.பி.எஸ்., ஆக தற்போது வதோராவில் பயிற்சி பெற்று வருகிறார். இவரது படிப்பு துவக்கம் முதலே அரசு பள்ளிகளில் தமிழ்வழி மூலமே கல்வி கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் பெற்ற பாலமுரளிக்கு ஆசிரியர்கள், முன்னாள் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
May 7, 2012
Home
kalviseithi
அரசு பள்ளி மாணவர் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் தேர்ச்சி.
அரசு பள்ளி மாணவர் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் தேர்ச்சி.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி