மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை மாணவர்கள் பின்பற்ற ஏதுவாக, சென்னையிலுள்ள அண்ணா பல்கலையின் கீழ், மாநிலம் முழுவதிலுமுள்ள 535 பொறியியல் கல்லூரிகளும் இணைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன்மூலம், உலகளாவிய உயர்கல்வியை மாணவர்கள் மேற்கொள்ள முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளிலுள்ள பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளாக மாற்றப்படும்.மேலும், நிர்வாக வசதிக்காக, திருச்சி, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும். எதிர்காலத்தில், அனைத்து தேர்வுகளும், மாநிலம் முழுவதிலுமுள்ள, பல்கலைக்கழகத்தின் 17 பிராந்திய அலுவலகங்களால் நடத்தப்படும்.அனைத்து பொறியியல் கல்லூரிகளும், ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படுவதால், மாணவர்கள் ஒரேவிதமான பாடத்திட்டத்தை படிக்கும் நிலை ஏற்படுவதோடு, உயர்கல்வியை உலகளாவிய அளவில் மேற்கொள்ளும் நிலை வரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jul 22, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி