டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2012

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து

தமிழகத்தில் நேற்றுநடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய தலைவர் நட்ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 144 மையங்களில் 6.4 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.தேர்வுதாள் ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வெளியானது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்வாணைய உறுப்பினர்களுடன் நட்ராஜ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். தேர்வு எப்போது? ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து 10 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று நட்ராஜ் கூறியுள்ளார். ஆணையஉறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, புதிய தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் நட்ராஜ் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி