தமிழகத்தில் பசுமைப்படை,சுற்றுச்சூழல் மன்றங்கள் இல்லாத பள்ளிகளில்,மாவட்டத்திற்கு தலா 100 வீதம்,3200 சுற்றுச்சூழல் மன்றங்களைதுவக்க, அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் பசுமை தினங்களில் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த மன்றங்களுக்கான நிதியினை, சுற்றுச்சூழல் துறை வழங்குகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை அறிவிப்பு பலகை,மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு, கால நிலை மாற்றம்,புவி வெப்பமயமாதலை தடுத்தல், புகையிலை ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு போன்ற பணிகளை செய்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்த மன்றங்கள் செயல்படுகின்றன. இந்த மன்றங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1250 வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே,பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, மாவட்டத்தில் தலா 100 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 32 மாவட்டங்களில், இந்தாண்டுமட்டும் 3200 மன்றங்கள் துவக்கப்படவுள்ளன. சுற்றுச்சூழல் மன்றங்கள் இல்லாத பள்ளிகள், அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொள்ளலாம் என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி