சென்னையை சேர்ந்த ராஜேஸ்தீனா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.நான் விழுப்புரம் மாவட்டம் திருவத்தூரில் கிராம நூலகத்தில் நூலகராக நியமிக்கப்பட்டேன். என்னை நூலகர் கிரேட் 3 என்ற அந்தஸ்தில் அரசு நியமித்து உத்தரவிட்டது. பின்னர் படிப்பு ஆவணங்களை மாவட்ட நூலகர் ஆய்வு செய்து எனது பதவியை பறித்து உத்தரவிட்டார். தபால் மூலம்எம்ஏ படித்தது தவறானது. எனவே பதவி பறிக்கப்பட்டதாக மாவட்ட நூலகர் அறிவித்தார்.நூலகர் உத்தரவை ரத்து செய்து எனக்கு மீண்டும் பணிவழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரித்த உயர் நீதிமன்றம்,, மாவட்ட நூலகர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை மாவட்ட நூலகர் அமல்படுத்தாததால் நீதிமன்றஅவமதிப்பு வழக்கை ராஜேஸ்தீனா தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அப்போது அரசுதரப்பில்கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜராகி, “பிளஸ் 2 முடித்து 3 ஆண்டு பி.ஏ. படித்து முடித்து, அதன்பிறகு 2 ஆண்டு எம்.ஏ படித்தால்தான் அது சட்டப்படி செல்லும், நேரடியாக தபால் மூலம் மனுதாரர் எம்.ஏ. படித்தது செல்லாது எனவே மனுதாரர் கோரிக்கையை ஏற்க கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.இதை நீதிபதி கே.சந்துரு ஏற்றுக்கொண்டு தபால் மூலம் நேரடியாக எம்ஏ படித்தவருக்கு அரசு பணி வழங்கியதை பறித்தது சரியானதுதான் எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி