பள்ளி வாகன விதிமுறை:விரைவில் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2012

பள்ளி வாகன விதிமுறை:விரைவில் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தாம்பரத்தில் தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து சிறுமி சுருதி பலியான வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் வந்தது.அப்போது, பள்ளி வாகன விதிமுறைகளை உருவாக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், விதிமுறைகளை வகுத்து உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.இதைக் கேட்ட உயர் நீதிமன்றம், காலம் கடத்தாமல் விதிமுறைகளை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இதேப்போன்ற விபத்துக்களில் உயிரிழந்த பள்ளிச் சிறார்களின் குடும்பத்துக்கும் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி