சஸ்பெண்ட் தலைமை ஆசிரியர்கள் மீது வழக்கு பாயுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2012

சஸ்பெண்ட் தலைமை ஆசிரியர்கள் மீது வழக்கு பாயுமா?

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட, 77 பள்ளி தலைமையாசிரியர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயுமா என, கல்வியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், 62 பேர், அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள், 11 பேர் என, மொத்தம், 73 பேர் நேற்று முன்தினம், "சஸ்பெண்ட்&'செய்யப்பட்டனர். ஏற்கனவே நான்கு பேர், "சஸ்பெண்ட்&' செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கல்வித் துறையில் ஒரே நேரத்தில், 77 பள்ளித் தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.அரசு பணத்தை கையாடல் செய்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயுமா&' என, கல்வியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கூறியதாவது: இந்த மோசடி சம்பவம்முழுக்க முழுக்க எங்கள் கவனத்துக்கு வராமல் அரங்கேறி உள்ளது. அதில் பள்ளித் தலைமையாசிரியர்கள், புரோக்கர்கள், ஆதி திராவிடர் நலத்துறையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். எங்கள் நிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.ஆதி திராவிடர் நலத்துறை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, 17பி சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காது. அதற்கு மாற்றாக அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி