பதிவு மூப்பின்படி வேலை கேட்டு போயஸ் கார்டனை முற்றுகையிட ஆசிரியர்கள்முயற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2012

பதிவு மூப்பின்படி வேலை கேட்டு போயஸ் கார்டனை முற்றுகையிட ஆசிரியர்கள்முயற்சி

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் 500க்கும் அதிகமானோர் போயஸ் கார்டனில் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட சென்றனர். இதனால்பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 1992-94ம் ஆண்டில் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 22 ஆயிரம் பேர் படித்தனர். அந்த பள்ளிகள் திடீரென மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். பின்னர் 2002ம் ஆண்டு அவர்களை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து படிக்க அரசு உத்தரவிட்டது. 2004ம் ஆண்டு பயிற்சி முடித்து வெளியில் வந்த அவர்களில் 8 ஆயிரம் பேருக்கு 2006ம் ஆண்டில் ஆசிரியர் பணி கிடைத்தது. மீதமுள்ள 14 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு இன்னும் காத்திருந்தனர். அவர்களில் சிலருக்கு கடந்த ஆட்சியில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வு எழுத வேண்டும் என்று அரசு அறிவித்தது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த மாதம் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் உள்ளஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், அரசு கொள்கை முடிவில் எதுவும் செய்ய முடியாது, அரசு தான் தீர்வு காண வேண்டும் என்று கைவிரித்து விட்டனர். இதையடுத்து இடைநிலை ஆசிரியர்கள், தலைமை செயலகத்தில் துறை செயலர் சபீதாவை சந்தித்து முறையிட்டனர். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவர் உறுதி அளித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தி இப்போது தேர்வு முடிவைவெளியிட உள்ளது. அதற்கு முன்னதாக இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடந்த அரசு எடுத்த நடவடிக்கை அடிப்படையில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை 500க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட போயஸ் கார்டனுக்கு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து அண்ணா மேம்பாலம் அருகில் உள்ளசெம்மொழி பூங்காவுக்கு அழைத்து சென்றனர். பின்னர் 7 ஆசிரியர்களை மட்டும் தலைமை செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துசென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி