""புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்,'' என, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா தெரிவித்தார்.இது குறித்து, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா (மேல்நிலைக் கல்வி) கூறியதாவது:தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 900 பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும்; 50 சதவீதம் நேரடி பணி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், பதவி உயர்வுப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அவர்களுக்கு, நிதித் துறையின் ஒப்புதல் பெறப்பட்டு, சம்பளம் வழங்கப்பட்டு உள்ளன.எந்த மாவட்டத்திலும் பிரச்னை கிடையாது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், ஆறு பள்ளிகளில் சேர்ந்த முதுநிலை ஆசிரியருக்கு, சம்பளம் கிடைக்கவில்லை என, தகவல் வந்துள்ளது. அவர்களுக்கும், ஓரிரு நாளில் சம்பளம் வழங்கப்படும்.புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.இவ்வாறு உமா தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி