சிறுபான்மை கல்வி உதவித்தொகை விண்ணப்பம் பெற கால நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2012

சிறுபான்மை கல்வி உதவித்தொகை விண்ணப்பம் பெற கால நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான உதவித்தொகைக்கான விண்ணப்பம் பெற, செப்டம்பர், 30ம் தேதி வரைகாலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அரசால் உதவி பெறும் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை,பயிலும் சிறுபான்மையின(கிறிஸ்துவர், முஸ்லீம், பாரசீகர், புத்த மதத்தினர், சீக்கியர்) மாணவ, மாணவியருக்கு, 2012-13ம் ஆண்டுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கான, கடைசி தேதி, செப்டம்பர், 30ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.கல்விநிலையங்கள் மாணவ, மாணவியரிடம்இருந்து, செப்டம்பர், 30ம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பங்களை சேகரித்து, அக்டோபர், 5ம் தேதிக்குள், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி