டி.இ.டி., தேர்வு தள்ளி போகுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2012

டி.இ.டி., தேர்வு தள்ளி போகுமா?

டி.இ.டி., மறுதேர்வு, அக்., 3ம் தேதி நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என, தெரியாததால், தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஜூலை, 12ம் தேதி நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) எழுதிய, 5.5 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தோல்வி அடைந்தவருக்கு, அக்., 3ல், மறுதேர்வு நடத்தப்படும் என,டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன."அக்டோபரில் நடக்கும் தேர்வில், புதிய தேர்வர் பங்கேற்க முடியாது' என, டி.ஆர்.பி., ஏற்கனவே அறிவித்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், வழக்குதொடரப்பட்டு உள்ளது. இம்மனுவிற்கு விரிவாக பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 17ம் தேதிக்கு கோர்ட் தள்ளி வைத்தது. தேர்வு தேதி நெருங்கிக் கொண்டிருக்கும்நிலையில், திடீரென புதிய தேர்வர்களை அனுமதித்தால், புதிதாக விண்ணப்பம் வழங்குவது, கூடுதலாக கேள்வித்தாள் அச்சடிப்பது என, பல்வேறு பணிகளை, டி.ஆர்.பி., செய்ய வேண்டியிருக்கும்.இப்பிரச்னை குறித்து, தமிழகஅரசுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த குழப்பங்களால், அக்., 3ல், திட்டமிட்டபடி டி.இ.டி., தேர்வு நடக்குமா என்ற குழப்பத்தில், தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி