முதன் முறையாக"ஆன்லைனில்' ஆசிரியர்கள் நியமன" கவுன்சிலிங - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2012

முதன் முறையாக"ஆன்லைனில்' ஆசிரியர்கள் நியமன" கவுன்சிலிங

முதன்முறையாக "ஆன் லைன்' மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நாளை நடக்கிறது.வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட முதுகலைஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை காலியிடங்களில் நியமிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடவாரியாகமுதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் கண்டறியப்பட்டு, பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சிலிங் சென்னையில் நடத்துவதற்கு பதில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் "ஆன்லைனில்' நடத்த, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.இதற்கான தகவல் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வந்துள்ளது. சிவகங்கை முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில்,"" நியமன கவுன்சிலிங் சென்னையில் நடத்துவது வழக்கம். பெண்கள் சென்னைக்கு சென்று, வருவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, முதன் முறையாக ஆன்லைன் கவுன்சிலிங் நாளை (செப்.,15) அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஆன்லைனில் அனுப்பும் காலியிடங்கள், கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கப்படும். இதை பார்த்து, பிடித்த இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம். உடனே உத்தரவு வழங்கப்படும். இதற்கான தகவல் ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி