நெல்லை பல்கலை.,தொலைநெறித் தொடர் கல்வி இயக்ககத்திற்கு டிசம்பர் மாதம் 14ம் தேதி தேர்வு துவங்குகிறது.நெல்லை பல்கலை.,தேர்வாணையர் பிரபாகர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நெல்லை பல்கலை.,தொலைநெறித் தொடர் கல்வி இயக்ககம் சார்பில் வருடாந்திர அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் முந்தையை தேர்வுகளில் தவறிய மாணவர்களுக்கும் டிசம்பர் மாதம் 14ம் தேதி முதல் தேர்வுகள் துவங்குகின்றன. மேற்படி தேர்வுக்குறிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அக்டோபர் 29ம் தேதிக்குள் அபராதத் தொகையினை நவம்பர் மாதம் 8ம் தேதிக்குள்அபராத தொகையுடன் "பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட்டகேட்பு வரைவோலையையும் இணைத்து தேர்வாணையர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், என்ற முகவரிக்கு நவம்பர் மாதம் 10ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.நவம்பர் மாதம் 11ம் தேதியில் இருந்து 16ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள்,நெல்லை தேர்வு மையத்தில் ரூ.500 அபராதத்தொகையுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.இவ்வாறு பிரபாகர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி