கல்வித்துறையில்,நான்காவது நாளாக நேற்று நடந்த
பணி நியமன கலந்தாய்வில்,உடற்கல்வி ஆசிரியர்,
1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.கடந்த, 21ம் தேதி,அமைச்சுப் பணியில் இருந்து,தகுதி வாய்ந்தவர்களுக்கு,
முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான
கலந்தாய்வு நடந்தது. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும்
துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது.
நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர்,கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர்,
84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453
பேருக்கான நியமனம் நடந்தது. அந்தந்த மாவட்ட
தலைமை இடங்களில்,இணையதளம் வழியாக,
கலந்தாய்வு நடந்தது.சென்னை மாவட்டத்தில்,
உடற்கல்வி ஆசிரியர்,31 பேர்,இசை ஆசிரியர்,
இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு,தையல் ஆசிரியர்,
மூன்று பேர் என, 40 ஆசிரியர் பணியிடங்கள்,
ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு,
சேத்துப்பட்டு,எம்.சி.சி., பள்ளியில்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன்
தலைமையில் நடந்தது."மாநிலம் முழுவதும்,அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453
பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்கள்,பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்' என,பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
Nov 25, 2012
உடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி