இன சுழற்சி வாரியாக தேர்ச்சி பட்டியல் வெளியிட கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2012

இன சுழற்சி வாரியாக தேர்ச்சி பட்டியல் வெளியிட கோரிக்கை

"டி.இ.டி.,
மறுதேர்வு தேர்ச்சி
விவரங்களை, இன
சுழற்சி வாரியாக
வெளியிட
வேண்டும்' என,
தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கழகம்,
கோரிக்கை
விடுத்துள்ளது.
இந்த ஆண்டு,
ஜூலையில் நடந்த,
டி.இ.டி., தேர்வில்,
தேர்ச்சி
பெற்றவர்களின்
விவரங்கள், இன
சுழற்சி வாரியாக,
விவரமாக,
டி.ஆர்.பி.,
வெளியிட்டது.
ஆனால், அக்., 14ல்
நடந்த மறுதேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களின்
விவரங்களை, இன
சுழற்சி வாரியாக,
எந்த
விவரங்களையும்,
டி.ஆர்.பி.,
வெளியிடவில்லை.
மறுதேர்வில்
தேர்ச்சி பெற்ற, 19
ஆயிரம் பேருக்கு,
சான்றிதழ்
சரிபார்ப்பு
முடிந்து விட்டது.
இறுதிப் பட்டியல்
வெளியிடுவதற்கா
ன பணிகள்
நடந்து வருகின்றன.
எனவே, இன
சுழற்சி வாரியான
தேர்ச்சிப் பட்டியலை
வெளியிட
வேண்டும் என,
தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கழக
தலைவர், சிவக்குமார்
வலியுறுத்தியுள்ள
ார். டி.இ.டி.,
தேர்வு வழியாக,
தேர்வு செய்யப்பட
உள்ள, 22 ஆயிரம்
ஆசிரியர்களையும்,
இன
சுழற்சி வாரியாக
பட்டியலை
தயாரித்து
வெளியிட
வேண்டும் எனவும்,
அவர் கோரிக்கை
விடுத்துள்ளார்.
இது குறித்து,
டி.ஆர்.பி.,
வட்டாரங்கள்
கூறியதாவது:
இறுதி தேர்வுப்
பட்டியல்
வெளியிடுவதற்கு
முன், இன
சுழற்சி பட்டியலை
வெளியிட்டால்,
தேவையற்ற
குழப்பங்கள் ஏற்படும்.
எனவே,
இறுதி தேர்வுப்
பட்டியல்
வெளியிட்ட பின்,
இன
சுழற்சி பட்டியல்
வெளியிட
நடவடிக்கை
எடுக்கப்படும்.
இவ்வாறு,
அவை தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி