அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள்இன்றுடன் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2012

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள்இன்றுடன் முடிவு.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. நாளை முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளிட்டவையில் 1 கோடியே 32 லட்சம் மாணவ மாணவியர் படிக்கின்றனர். இவர்களில் 1 முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு முப்பருவ முறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி தற்போது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கின்றன(அரையாண்டுத் தேர்வு) இந்த தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வாக நடத்தப்படுகிறது. அவர்களை பொறுத்தவரை இந்த தேர்வு ஜனவரி 10ம் தேதி வரை நடக்கும். இதற்கிடையே நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை அறிவிக்கப்படுவதால் விடுமுறை முடிந்தும் இவர்கள் தேர்வு எழுத வேண்டும்.1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் முடிவதுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை ஜனவரி 1 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 3ம் பருவம் தொடங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி