விருதுநகரில், ரேஷன் கடை பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில், இடமும்,தேதியும் இல்லாததால்,தேர்வுக்கு வந்தவர்கள்
தவித்தனர்.தமிழகம் முழுவதும் ரேஷன் கடை
விற்பனையாளர்,எடையாளர் காலிப்பணியிடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு,
தகுதியுள்ளவர்களுக்கு நேற்று முதல் நேர்முகத் தேர்வு துவங்கியது.கூட்டுறவுத்துறை சார்பில், விருதுநகர்
மாவட்டத்தில் 8570 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.அதில், பலருக்கு தேர்வு நடக்கும் இடம், தேதி,நேரம் குறிப்பிடப்படவில்லை.அவர்கள் செய்வதறியாது திகைத்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இணைப்பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு
கொண்டனர்.அங்கு இவர்களது அழைப்புக்கடிதம் சரி
பார்க்கப்பட்டு, டான்பெட் உரக்கிடங்கு, மத்திய
கூட்டுறவு வங்கி,வகுத்தான் திருமண மண்டபம் ஆகிய
இடங்களில் நடக்கும் நேர்முக தேர்வுகளில்,எங்கு வேண்டுமானலும் பங்கேற்கலாம், என
தெரிவிக்கப்பட்டது.இதனால்,விண்ணப்பதாரர்கள்
சிரமப்பட்டனர்.கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்
குருமூர்த்தி கூறுகையில், "குறைந்த கால அவகாசத்தால், ஒரு சிலருக்கு இது போன்று அழைப்பு கடிதம்
சென்றுள்ளது. அவர்கள் மூன்று மையங்களில்,ஏதாவது ஒன்றில் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.
அனைவருக்கும் விடுபடாமல் கண்டிப்பாக நேர்முகத்
தேர்வு நடத்தப்படும்,என்றார்.
Dec 18, 2012
ரேஷன் பணியாளர் நேர்முகத்தேர்வு: அழைப்புக் கடிதத்தில் குழப்பம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி