சேலம் மாவட்டம் சாத்தப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சரவணக்குமார் என்பவர் இயற்பியல் பாட முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், சாத்தப்பாடி அரசுப்பள்ளியில் கடந்த 5ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அப்பள்ளி ஆசிரியர்கள் எழுதிய பாடக்குறிப்பேடுகளை ஆய்வு செய்தார். பாடக்குறிப்பேட்டை கொண்டு வரும்படி ஆசிரியர்சரவணக்குமாருக்கு உத்தரவிட்டார். குறிப்பேட்டை எடுத்து வருவதாக கூறிச்சென்ற ஆசிரியர் சரவணக்குமார், ஆய்வு முடியும் வரை கலெக்டரிடம் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, அரசு விதிகளுக்கு புறம்பாக தமது கடமையில் இருந்து தவறியதாகவும், அவர் மீது குடிமுறைப்பணி ஒழுங்குமுறை மற்றும் மேல் முறையீடு விதி 17 (ஏ)-ன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி முதன்மைக் கல்வி அலுவலரிடம் கலெக்டர் புகார் அளித்தார். அதன்படி, ஆசிரியர் சரவணக்குமாருக்கு 17 (ஏ)-ன் பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன் மெமோ அளித்தார்.அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் இதன் நகல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடுகளை எழுதும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, ஆசிரியர் சரவணக்குமார் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது, என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி